கோவை:ஆம்புலன்சில், ஒரு டன் கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி விற்பனை செய்த உரிமையாளருக்கு, ஜாமின் மறுக்கப்பட்டது.கோவை போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார், 2019, அக்., 23ல், சைரன் ஒலித்த படி வந்த, டெம்போ டிராவலர் ஆம்புலன்சை நிறுத்தி சோதனையிட்டனர்.ஆந்திராவிலிருந்து 500 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆம்புலன்சில் வந்த அருண் குமார், கவுதம், சந்தோஷ்குமார், ேஷக்தாவூத் ஆகியோரை கைது செய்தனர்.விசாரிக்கையில், உடுமலையை சேர்ந்த கருப்பசாமி என்பவர், அவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.கருப்பசாமியை கைது செய்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது, 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இவர்களில், நான்கு பேர் ஜாமின் மனுக்கள் பல முறை தள்ளுபடியானது.இந்நிலையில், ஆம்புலன்ஸ் உரிமையாளர் கருப்பசாமி, ஜாமின் கோரி, கோவை இ.சி., கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும்ல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE