மும்பை: நடிகை கங்கனா ரணாவத்தை மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.
மும்பை குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதற்கும்,மும்பை போலீசாரை மாபியாக்கள் என விமர்சித்து டுவிட் செய்ததது தொடர்பாக நடிகை கங்கான ரணாவத் மீது மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று விமானம் மூலம் நடிகை கங்கனா மும்பை வந்திறங்கினார். கங்கனாவிற்கு சொந்தமான பந்த்ராவில் உள்ள கட்டடங்களை மும்பை மாநகராட்சியினர் விதி மீறல் என கூறி நேற்று இடித்து தள்ளினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே , நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து நடிகை கங்கனா ரணாவத் விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே தனது கட்டடம் இடிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE