புதுடில்லி: சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது எனவும், அந்த நிலத்தை திரும்பப் பெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என காங்., எம்பி ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்., எம்பி., ராகுல், இந்திய பொருளாதாரம், கொரோனா பொதுமுடக்கம் என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் அவர் இன்று, எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது: சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப் பெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என கைவிட முடிவு செய்யப்பட்டு விட்டதா?. இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

The Chinese have taken our land.
When exactly is GOI planning to get it back?
Or is that also going to be left to an 'Act of God'?
— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement