கோல்கட்டா: கொரோனா முடிந்துவிட்டது எனவும், தேவையில்லாமல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் பாஜ.,வில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியவில்லை எனவும் மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேற்குவங்கத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் பாஜ., கூட்டத்தில் நோய் பரவல் குறித்த அச்சமின்றி ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது: பாஜ.,வினர் பெருந்திரளாக கூடியிருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.

கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேவையில்லாமல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பாஜ.,வால் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE