இந்த செய்தியை கேட்க
சிவகங்கை: 'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீங்கள் படிக்காமல் போங்கள் என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: 'கிஷான்' திட்டத்தில் ஊழலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் அடித்து, அவர்கள் கழுத்தில் மக்கள் விரோதிகள் என்று எழுதிய போர்டு தொங்கவிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும். தி.மு.க.,வில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கனிமொழியும் , ஆ.ராசாவும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக எண்ணுகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் அது அனைவருக்கும் சமமானதாக இருக்கும். எல்லா மொழிகளும் இருப்பதால், அது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கும். 'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீங்கள் படிக்காமல் போங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE