பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் வார்டு 5,7 வார்டு பகுதியில் குடிநீர் சீராக கிடைக்காததால் அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வார்டு உறுப்பினர்கள் ராஜ், எழுமலை தலைமையில் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.ஊராட்சித் தலைவர் உலகநாதன் சென்று, இரு நாட்களில் சரி செய்யப்படும். இரு நாட்களுக்கு தண்ணீர் டேங்க் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.இதனையடுத்து 11:30 மணிக்கு அப்பகுதிமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE