புவனகிரி; புவனகிரியில் அதிகாலையில் சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு ஏற்ப புவனகிரி பங்களா அருகில் நின்றிருந்த சீர்காழி தாலுகா, திட்டை கன்னிக்கோவில் தெரு மணிகண்டன், 37; புவனகிரி பஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மேல்புவனகிரி முத்தாச்சிப் பிள்ளை கோவில்தெருஅன்பழகன், 50; ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE