புவனகிரி; புவனகிரி அருகே டயர் வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தனித்தனியாக ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்புவனகிரி முள்ளிப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் வந்த டயர் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் அனுமதியின்றி ஏற்றி வந்த ஆற்று மணல் அரை யூனிட் இருந்தது.வண்டியை பறிமுதல் செய்து, கிழக்கு புவனகிரி, கிழக்கு யாதவதெரு பிச்சைப்பிள்ளை, 40; என்பவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE