விழுப்புரம்; விழுப்புரம் அருகே காகுப்பம் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துவருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் காகுப்பம் அமைந்துள்ளது. நகராட்சி கட்டுபாட்டின் கீழ் காகுப்பம் பகுதி அமைந்திருந்தாலும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.காகுப்பம் பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களாக சேதமடைது குண்டும், குழியுமாகவும், மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் சமீபத்தில் பெய்த மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பல முக்கிய இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியில் மக்கள் அச்சத்தோடு பயணிக்கின்றனர். இந்த பகுதி சாலை மற்றும் தெரு விளக்குகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE