நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (129) | |
Advertisement
மதுரை; 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.நாளை(செப்.,13) நீட்
suicide, NEET exam,medical entrance test,Madurai, நீட்,மதுரை

மதுரை; 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.


latest tamil news


நாளை(செப்.,13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (129)

தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-செப்-202023:17:19 IST Report Abuse
தமிழவேல் படிப்பதற்கும், தொழிலை தேர்தெடுக்கவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு பெற்றோர்கள் விடவேண்டும். படிப்புத் திறன், இருப்பு அவர்களுக்குத்தான் தெரியும். தனக்குப் பிடிக்காத ஒன்றில் தள்ளி, அதில் அவர்கள் சாதித்து விட முடியாது.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
12-செப்-202020:08:00 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan நாங்க தற்கொலை பண்ணிக்குவோம். ஆனால் தகுதியை வளர்த்துக்கொள்ள மாட்டோம். இது தவிர மொழிப்பிரச்னை வேறு. ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாடுகள், மக்கள்தொகை: அமெரிக்கா 30 கோடி, கனடா 2.9 கோடி, அயர்லாந்து 47 லட்சம், இங்கிலாந்து 6 கோடி, ஆஸ்திரேலியா 2.4 கோடி, மற்றும் நியூஸியிலாந்து 39 லட்சம்: மொத்தம் 42 கோடி. இந்தியாவில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் 53 கோடி, மேலும் கிட்டத்தட்ட ஹிந்தி போன்ற மொழிகள் (குஜராத்தி, மராட்டி, போஜ்புரி, பெங்காலி, உருது) பேசும் இந்தியர்கள் 28.5 கோடி): மொத்தம் 81.5 கோடி. இவை தவிர இந்தியாவின் மற்ற மாநில மக்கள் ஓரளவுக்கு ஹிந்தி மொழி தெரிந்தவர்கள். தமிழகம் மட்டுமே குழந்தைகள் பல மொழிகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் பயந்து, தற்கொலை செய்துகொள்ள தூண்டும் சூழலில் இருக்கிறது.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
13-செப்-202009:50:08 IST Report Abuse
MARUTHU PANDIARvote...
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
13-செப்-202009:52:53 IST Report Abuse
MARUTHU PANDIARகேவலம், கேவலம், ஒட்டு வங்கி கேவலம். இங்கு மட்டும் தான் இப்படி....
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
12-செப்-202019:55:23 IST Report Abuse
JSS பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் உரித்தாகுக. உள்ளம் வருந்துகிறது.இந்த திராவிட கட்சிகள் மாணவர்களிடையே நபிக்கையை வளர்ப்பதற்கு பதில் விஷத்தை ootti vittna,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X