ஓசூர்: ஓசூர், சூளகிரியில், குட்கா விற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஓசூர், டவுன் ஸ்டேஷன் போலீசார், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், ஹட்கோ போலீசார் பத்தலப்பள்ளியிலும், சூளகிரி போலீசார் கோனேரிப்பள்ளி, சப்படி ஆகிய பகுதிகளிலும், தனித்தனியாக ரோந்து சென்றனர். அப்போது, பெட்டிக்கடை மற்றும் மளிகைக்கடைகளில், தடை செய்த குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, ஓசூர் புதிய வசந்த் நகரை சேர்ந்த சுரேஷ், 43, பார்வதி நகரை சேர்ந்த ரவி, 36, பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்த மஞ்சுநாத், 32, பத்தலப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, சப்படியை சேர்ந்த சுரேஷ், காமசந்திரத்தை சேர்ந்த முனிராஜ், 35, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம், 1,330 ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE