திண்டிவனம்; திண்டிவனத்தில் தனியார் கம்பெனி ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் நாகலாபுரம் சின்னமுதலி தெருவை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் ராமராஜன், 26; தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு சுகுமாரன் மற்றும் அவரது மைத்துனர் ஏகாம்பரம், ராமராஜன் ஆகிய மூவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.நேற்று காலை 7:30 மணிக்கு, ஏகாம்பரம் எழுந்து கழிவறைக்கு சென்ற போது, ராமராஜன் அங்கு மயக்கிக் கிடந்தார். அவரை இருவரும் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராமராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சுகுமாரன் திண்டிவனம் போலீசில், தனது மகன் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE