திருச்சி : 'எனக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உண்டு. வீட்டிற்கே அழைத்து வந்து உல்லாசமாக இருப்பேன்' என, கைதான வங்கி ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்தவர், வங்கி கேஷியர் எட்வின் ஜெயகுமார், 37.இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர்களுடன் ஆபாசமாக படம் எடுத்து உள்ளதாகவும், அவரது மனைவி கொடுத்த புகாரில், கைது செய்யப்பட்டார்.ஜெயகுமார் வாக்குமூலம்:என் தங்கை திருமணம் முடிந்து, எனக்கு திருமணம் தாமதம் ஆனதால், வங்கியில் வேலை பார்க்கும் பெண், வங்கிக்கு வரும் பெண்கள், மணப்பாறையில் உள்ள பெண்கள் என பலருடன், எனக்கு தவறான உறவு ஏற்பட்டது.
அவர்களுடன் ஜாலியாக இருக்கும் போது, மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுத்து, அதை தனியே ரசித்துப் பார்ப்பேன். பெண்கள் யாரும், நிர்வாண கோலத்தில் போட்டோ எடுப்பதையோ, வீடியோ எடுப்பதையோ தடுக்கவில்லை. எனக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உண்டு. பல பெண்களை, வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE