வாலாஜாபாத் : பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவம் மற்றும் ரண காயத்திற்கு சிகிச்சை பெற வருவோரிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பரந்துார், சிறுவாக்கம், கொட்டவாக்கம் உள்ளிட்ட பல ஊராட்சிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவம் மற்றும் பல தரப்பு மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு வருகின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சிலர், பிரசவம் மற்றும் ரணகாய சிகிச்சை அளிப்பதற்கு, கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பிரசவத்திற்கு வரும் பெண்களிடம்,1,000 ரூபாயும், ரண காயத்திற்கு வரும் நபர்களுக்கு, 'டிரஸ்சிங்' செய்வதற்கு, 300 ரூபாயும் அடாவடியாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதை, அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, மருத்துவமனைக்கு வருவோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE