உடுமலை:உடுமலை அருகே, தேவனுார்புதுாரில், நபார்டு மற்றும் சமூக சுகாதார வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.இதற்கான துவக்க விழாவில், ஊராட்சித்தலைவர் செழியன், தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் ஞானையா, பயிற்சியாளர் மகாலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா, நபார்டு வங்கி அதிகாரி ராஜூ, மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழு நிதிப்பிரிவு அலுவலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE