மதுரை : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் கடை ஊழியர்விஸ்வநாதன் உட்பட சிலர், 'அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழகஅரசு மே 7 அரசாணை பிறப்பித்தது.
அதன்படி எங்களுக்கும்ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க அரசுக்குஉத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அரசுத்தரப்பில், 'அரசாணைப்படி டாஸ்மாக் நிரந்தர ஊழியர்களுக்கு 59 வயது, ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களுக்கு 58 ஆக ஓய்வு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தற்காலிக ஊழியர்கள்; வயது நீட்டிப்பு சலுகை அவர்களுக்கு பொருந்தாது,' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: 58 வயது பூர்த்தியடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். ஒப்பந்த அல்லது தற்காலிக ஊழியர்கள் ஓய்வு வயது நீட்டிப்பு சலுகையைஉரிமையாக கோர முடியாது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE