புதுடில்லி: தென் மாநிலங்களைச் சேர்ந்த பலர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பதில் அளித்துப் பேசியதாவது: தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகியவற்றில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாக 17 வழக்குகளை தேசிய விசாரணை முகமை பதிவு செய்து, இதுவரை 122 பேரைக் கைது செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள், குறிப்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம், ராஜஸ்தான், பீஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தீவிரமான செயல்பாட்டில் இருப்பாதகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த அமைப்பு தனது கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்ப பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. சைபர் பிரிவு அதிகாரிகள் மிகவும் தீவிரமாக இதைக் கண்காணித்து வருகின்றனர். கவலை தரக்கூடிய சம்பவங்கள் நடந்தால், சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE