சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,16) ஒரே நாளில் 5,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.64 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 7 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 170 ஆய்வகங்கள் (அரசு-65 மற்றும் தனியார்-105) மூலமாக, இன்று மட்டும் 84,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 61 லட்சத்து 33 ஆயிரத்து 399 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,489 பேர் ஆண்கள், 2,163 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,13,327 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,06,504 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,559 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 22 ஆயிரத்து 218 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 29 ஆயிரத்து 796 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 ஆயிரத்து 846 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE