தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் முத்தி பாளையத்தில், அசாமை சேர்ந்தவர் அபுல்ஹாசன், 25, மனைவி திரிசினா,20, 3 வயது பெண் குழந்தை, 9 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.நேற்று காலை அபுல்ஹாசன் வழக்கம்போல, பணிக்கு சென்றுவிட்டார். திரிசினா, வீட்டிற்குள் பணிபுரிந்து கொண்டிருக்க, இரண்டு குழந்தைகளும் வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து திரிசினா வெளியில் வந்து பார்க்கும்போது, ஒன்பது மாத குழந்தையை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த தாய், அக்கம், பக்கம் முழுவதும் தேடி பார்த்துள்ளார். குழந்தை எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வீட்டு வாசலில், தண்ணீர் நிறைந்து இருந்த பிளாஸ்டிக் டப்பில், ஒன்பது மாத குழந்தை மூழ்கியிருந்தது தெரியவந்தது.குழந்தையை தொண்டா முத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.தொண்டாமுத்துார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE