கடலுார்; கடலுார் அரசு கல்லுாரி வளாகத்தில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து இறுதி பருவத் தேர்வை எழுதினர்.கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் நடத்தாத நிலையில் கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, பிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.இதனிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு நடத்தப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித்தது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் நேற்று இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட்டது.நேற்று துவங்கிய தேர்வு வரும் 22ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. காலை 9:30 மணிக்கு மாணவர்களின் மொபைலில் வினாத்தாள் லிங்க் தரப்பட்டது. பகல் 1:00 மணி வரை தேர்வு நடந்தது. பின்னர், மாலை 2:00 மணிக்கு துவங்கி 5:00 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது.மாலை தேர்வு முடிந்ததும் அருகே உள்ள தபால் துறை ஆர்.எம்.எஸ்., மூலம் விடைத்தாள்களை அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் இளநிலை இறுதி பருவத்தேர்வை ஆயிரம் மாணவர்களும், முதுநிலை இறுதி பருவத்தேர்வை 200 மாணவ மாணவர்களும் எழுதியதாக கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.கல்லுாரிக்கு அருகே வசிக்கும் மாணவ, மாணவியர், கல்லுாரி வளாகத்தில் மரத்தடியி ல் கூட்டமாக அமர்ந்து தேர்வு எழுதினர். கல்லுாரி முதல்வர் உள்ளிட்ட துறை பேராசிரியர்கள் தேர்வுகளை ஆன்லைன் மூலம் கண்காணித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE