திண்டிவனம்; குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கக் கோரி, வானூர் அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தியதால்பரபரப்பு ஏற்பட்டது.வானூர் வட்டம் பூத்துறை ஊராட்சியில் ஓம்சக்தி நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் தொழிற்சாலை நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், அப்பகுதியில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அனுமதியின்றி இயங்கும், தனியார் தொழிற்சாலையை மூடக்கோரியும், குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரியும் அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வானூர் தாசில்தார் உள்ளிட்டோருக்கு புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அரசு இப்பகுதியில் உள்ள குடிநீர் உறிஞ்சும் தொழிற்சாலையைமூடவேண்டும். எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE