சேலம்: சேலம், அழகாபுரம், தோப்புக்காட்டை சேர்ந்த தியாகு மனைவி ஜெயலட்சுமி, 42. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஜெயலட்சுமி விவகாரத்து பெற்று தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, அவர், வீட்டின் பின்புறம் நடந்து சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது, கிணற்றுக்குள் இருந்த குழாயை பிடித்து தொங்கிய படி, உயிரை காப்பாற்றக்கோரி கூச்சலிட்டார். மக்கள், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, ஜெயலட்சுமியை உயிருடன் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE