அரூர்: அரூர் அருகே, சிறுமியை காரில் கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே, செங்குட்டையை சேர்ந்தவர் கரண், 23; ஜோசியம் பார்த்து வரும் இவர், அம்மாபேட்டையில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரமுள்ள கோவில் வளாகத்தில் தங்கி வந்துள்ளார். அங்கு, தாத்தா வீட்டில் இருந்த, 17 வயது சிறுமியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 11ல் இரவு, 10:00 மணிக்கு, காரில் வந்த கரண், சிறுமியை அழைத்துக்கொண்டு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சென்று, அங்கு ஒரு வீட்டில் அவரை தங்க வைத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, சிறுமியை காரில் அழைத்து வந்து, அம்மாபேட்டை சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமி புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கரணை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE