தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மரியாதை இல்லை: மாஜி அமைச்சர் நேரு புலம்பல்
தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மரியாதை இல்லை: மாஜி அமைச்சர் நேரு புலம்பல்

தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மரியாதை இல்லை: மாஜி அமைச்சர் நேரு புலம்பல்

Added : செப் 18, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
தேனி:''தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அ.தி.மு.க. ஆட்சியில் மரியாதை இல்லை,'' என, அக்கட்சி முதன்மை செயலாளர் கே.என். நேரு ஆதங்கப்பட்டார்.தேனியில்மாவட்ட தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தல் ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., முதல்வர்களாக இருந்த போது தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலும் அதற்கு தனி மரியாதை இருந்தது. தற்போது 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் உரிய
 தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் மரியாதை இல்லை: மாஜி அமைச்சர் நேரு புலம்பல்

தேனி:''தி.மு.க.,வில் 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அ.தி.மு.க. ஆட்சியில் மரியாதை இல்லை,'' என, அக்கட்சி முதன்மை செயலாளர் கே.என். நேரு ஆதங்கப்பட்டார்.

தேனியில்மாவட்ட தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தல் ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெ., முதல்வர்களாக இருந்த போது தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலும் அதற்கு தனி மரியாதை இருந்தது. தற்போது 95 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் உரிய மரியாதை இல்லை. மத்திய, மாநில அரசுகள் தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதை குறியாக உள்ளனர். தி.மு.க.,தொண்டர்களை நம்பி உள்ளது.



சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் தொண்டர்கள் பதவி பெறுவர். கட்சியில் 35 ஆண்டுகள் பணியாற்றியவர்களைஒதுக்கி விட்டுநேற்று வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்க கூடாது. 10 ஆண்டுகள் எந்தபலனும் எதிர்பாராமல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கலாம், என்றார்.



மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில விவசாய அணி செயலாளர் மூக்கையா, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன், எம்.எல். ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார், தேனி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர், ஒன்றியம் வாரியாக பிரச்னைகள் தொடர்பாக தனி அறையில் மனு பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
20-செப்-202016:52:06 IST Report Abuse
Loganathaiyyan நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒரு எருமை கூட்டம் செல்கின்றது ஒரு மான் கூட்டம் செல்கின்றது இரண்டும் மிருக இனங்கள் தான் நாம் ஆகா ஓகோ என்று எந்த கூட்டத்திற்கு சொல்லுவோம் இப்போ புரிஞ்சிருக்குமே திமுக என்ன கூட்டம் என்று
Rate this:
Cancel
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
20-செப்-202005:56:46 IST Report Abuse
Bye Pass நீண்ட காலம் ஆட்சியை இழந்ததால் முன்பு போல் திமுகவினர் அடிதடியில் இறங்க முடிவதில்லை . அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் வயசானவங்க என்ன பண்ணுவாங்க ..அடிதடி இல்லன்னா வேஷ்டி கிழிச்சுப்பாங்க ..
Rate this:
Cancel
Meenaksisundaram N S - bangalore,இந்தியா
20-செப்-202004:26:00 IST Report Abuse
Meenaksisundaram N S வயசு ஆயிடுச்ள்ள இப்பவாவது அறிவு வந்து திருந்த வேண்டாமா?இன்னும் என்ன மரியாதை வேண்டி கிடக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X