புதுடில்லி: மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றிருந்த, காங்., தற்காலிக தலைவர் சோனியா, இன்று(செப்.,22) நாடு திரும்பினார்.
காங்., தற்காலிக தலைவரான சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த, 12ல், அமெரிக்கா சென்றார். அவருடன், அவருடைய மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான, ராகுலும் சென்றிருந்தார். பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடங்க இருந்த நிலையில், அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே, பரிசோதனைக்காக சோனியா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாட்டில் 'கொரோனா' வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், பயணத்தை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, இன்று காலையில், தன் மகன் ராகுலுடன், சோனியா டில்லி திரும்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE