10 லட்சம் பேருக்கு அரசு வேலை: லாலு கட்சி வாக்குறுதி
10 லட்சம் பேருக்கு அரசு வேலை: லாலு கட்சி வாக்குறுதி

10 லட்சம் பேருக்கு அரசு வேலை: லாலு கட்சி வாக்குறுதி

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
பாட்னா: ''பீஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்குவோம்,'' என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தெரிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா
10 லட்சம் பேருக்கு அரசு வேலை: லாலு கட்சி வாக்குறுதி

பாட்னா: ''பீஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்குவோம்,'' என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தெரிவித்தார்.



பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளும், லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில், காங்., மற்றும் கம்யூ., கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், கட்சியின் முதல்வர் வேட்பாளருளான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:



latest tamil news

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக, முதல்வர் நிதிஷ் குமார் கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, நாங்கள் ஆட்சியமைத்தால் உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை் வழங்குவோம். இது, போலி வாக்குறுதியல்ல. நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், பீஹார் தேர்தல் பாதுகாப்பு பணியில், 30 ஆயிரம் துணை ராணுவ படையினரை ஈடுபடுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

S. Narayanan - Chennai,இந்தியா
28-செப்-202019:25:45 IST Report Abuse
S. Narayanan சாணி பொறுக்கிற வேலையா.
Rate this:
Cancel
28-செப்-202016:08:19 IST Report Abuse
ஆப்பு போற போக்கிலே ஆளுக்கு ரெண்டு மூணு வேலை குடுக்காம விட மாட்டாங்க போலிருக்கே...
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
28-செப்-202014:54:43 IST Report Abuse
Appan மாடு மேய்க்கும் வேலை கொடுப்பான்...இந்த வேலையை செய்வதில் என்ன தப்பு..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X