சியோல்: தென்கொரியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் இதுவரை 23,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,292 பேர் குணமடைந்துள்ளனர். 406 பேர் பலியாகினர். தென்கொரியாவில் கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பின், சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்ததும், அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் குறையத் துவங்கியுள்ளது.

தென்கொரிய நோய்த் தடுப்பு மையம், 'தென்கொரியாவில் 2ம் கட்டப் பரவல் துவங்கிய நிலையில், கடந்த மாதம் 15ம் முதல் கொரோனா தொற்று குறையத் துவங்கியுள்ளது. இன்று (செப்., 28) 50 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று குறைந்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE