சென்னை:ஜெயேந்திர சரஸ்வதி, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி' கல்லுாரியின், புதிய மாணவர்களுக்கான துவக்க விழா, காணொளி வாயிலாக நடந்தது.
ஜெயேந்திர சரஸ்வதி, 'இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி' கல்லுாரியின், புதிய மாணவர்களுக்கான துவக்க விழா, பம்மலில் உள்ள, சங்கரா மருத்துவமனையில், நேற்று நடந்தது.காணொலி வாயிலாக நடத்தப்பட்ட விழாவில், கல்லுாரி முதல்வர் கோபாலாகிருஷ்ணன் பார்வையாளர்களை வரவேற்றார்.
தொடர்ந்து, சங்கரா கண் மருத்துவமனையின் அறங்காவலர் வி.சங்கர், 'ஆப்டோமெட்ரி' என்ற கண் மருத்துவ பாடத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பாடத்திட்டங்கள், வகுப்புகள் குறித்து, துறையின் விரிவுரையாளர் சீதாராமன் எடுத்துரைத்தார்.மூத்த ஆசிரியர் ரம்யா, கல்லுாரியின் ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார். மாணவர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE