அ.தி.மு.க., வரலாற்றில் முதன்முறையாக வழிக்காட்டுக்குழு

Updated : அக் 08, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: அதிமுக வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இல்லாத ஒரு குழு தற்போதுதான் அமைக்கப்படுகிறது.ஜெ., மறைவுக்குப்பின் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பழனிசாமி, பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்து துணை முதல்வர் பொறுப்பும் வழங்கி சுமுகமாக சென்று
A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: அதிமுக வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இல்லாத ஒரு குழு தற்போதுதான் அமைக்கப்படுகிறது.



ஜெ., மறைவுக்குப்பின் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பழனிசாமி, பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்து துணை முதல்வர் பொறுப்பும் வழங்கி சுமுகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சியில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற குரல் உள்ளிட்டவைகளால் அதிமுகவில் சமீபத்தில் குழப்பம் ஏற்பட்டது.



இதனையடுத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டதாக செய்தி கிளம்பியது. இந்நிலையில் கட்சியில் வழிகாட்டுக்குழு அமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் பேச்சு நடத்தினர். இதனையடுத்து வழிக்காட்டுக்குழு அமைக்க முடிவு ஏற்பட்டுள்ளது. இந்த வழிக்காட்டுகுழு என்பது மிக அதிகாரமிக்க கமிட்டி ஆகும்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

latest tamil news


இந்தக்குழுவில் இடம் பெறுவோர் எடுக்கும் முடிவுகளை கட்சியை வழிநடத்தும். அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர்., தொடர்ந்து கட்சியின் பொதுசெயலராக இருந்த ஜெயலலிதா காலத்தில் இந்தக்குழு என்பது கட்சியில் இல்லாமல்தான் இருந்தது. தற்போது வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பல்வேறு கட்சிகளில் கமிட்டிகள்


வழிக்காட்டுக்குழு என்பது இந்தியாவில் உள்ள முக்கிய அனைத்துக்கட்சிகளிலும் வேறு, வேறு பெயர்களில் உள்ளன. அதாவது பா.ஜ.,வை பொறுத்தவரை மையக்குழு என்றும் , காங்கிரசில் காரியக்கமிட்டி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட்பீரோ, திமுகவில் உயர் செயல்திட்டக்குழு என்றும் அமைப்புகள் உள்ளன. இந்த கமிட்டி கட்சியின் அதிகார மையமாக இருக்கும். நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு என எதுவாக இருந்தாலும் கட்சியின் இறுதி முடிவாகவும் இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

08-அக்-202000:39:48 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் ஓ.பி.எஸ் சாமர்த்தியம் மற்றும் அரசியல் சாணக்கியர்/விகடகவி, இந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறாவிட்டால், பழியை எடப்பாடி திரு.பழனிச்சாமியால் தான் என்றும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்து இருந்தால் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாம் என்று தப்பித்து கொள்ள ஓ.பி.எஸ் க்கு ஒரு நல்ல வாய்ப்பு
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
07-அக்-202023:38:37 IST Report Abuse
அறவோன் "தங்கப்ப தக்கம்" தான் ஆகப்போகிறது
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
07-அக்-202022:31:31 IST Report Abuse
blocked user திமுகவில் இதே போல வழிபாட்டுப்புழு என்று ஆரபித்தால் அதில் பி கே முதல் இடத்தில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X