புதுடில்லி: நடிகை குஷ்பு பா.ஜ.,வில் இணையவுள்ளார் என்ற தகவல் கசிந்ததால் அவர் கட்சியில் சேரும் முன்னதாக அவரை காங்.,செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியது.

கடந்த 2010 முதல் திமுகவில் இருந்த நடிகை குஷ்பு , 2014 ல் இருந்து காங்கிரசில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவர் சமீப காலமாக காங்கிரசில் சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் கட்சி மீதும், கட்சி தொண்டர்கள் அவர் மீதும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் அவர் பா.ஜ.,வில் சேரவுள்ளதாக செய்தி பரவியது. இதனால் இவர் இன்று (அக்., 12) டில்லி சென்றுள்ளார்.

இதனையடுத்து குஷ்புவை காங்., செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் மூத்த செயலர் பிரனவ்ஜா தெரிவித்துள்ளார்.
ராஜினாமா கடிதம் அனுப்பினார்
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு ஒரு அறிக்கை வெளியிட்டார். காங்., தலைவர் சோனியாவுக்கு அனுப்பி உள்ள இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

' தாம் கட்சியில் உண்மையாக பணியாற்றினேன். இது யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை ஒடுக்க நினைத்தனர். இதனால் நான் காங்., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளேன்.' பணம், பதவி, புகழ் போன்ற காரணங்களுக்காக நான் காங்., கட்சியில் சேரவில்லை. காங்கிரசில் பதவி கொடுத்த திரு.ராகுல்ஜி மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE