வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?

Updated : அக் 15, 2020 | Added : அக் 15, 2020 | கருத்துகள் (141) | |
Advertisement
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள்,
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, முக்கிய கோவில்களில், கட்டணமில்லாத சிறப்பு தரிசனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.



தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள், கவர்ச்சிகரமான திட்டங்கள், வாக்குறுதிகள் குறித்து முடிவு செய்வதற்காக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின், முதல் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் விவாதித்தது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: குடும்பத்தில், படித்த ஒருவருக்கு, அரசு வேலை, போலீசாருக்கு வார விடுமுறை, அரசு மருத்துவமனைகளில் உயர் தரமான சிகிச்சை, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு ஆகிய அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். ஏரி, குளங்களை துார்வரும் திட்டம், பராமரிக்கும் திட்டம், கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான திட்டம் ஆகியவை குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



latest tamil news

மேலும், பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு கட்டணமில்லாமல் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பது, கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது, கனிம வளங்கள், ஆற்று மணல் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது, பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யும்போது, பதிவுக் கட்டணம், 50 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்தும், குழுவினர் ஆலோசித்துள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.



கூட்டம் முடிந்த பின், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும், 2021ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை ஒட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும், தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும், நேரில் அல்லது அஞ்சல் வாயிலாக, கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அனுப்பி வைக்கலாம். அத்துடன் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க விரும்புவோர், manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (141)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-202018:33:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஹஹஹஹஹாஹ் ஹிஹிஹிஹி இதைப்படிச்சால் அடியேனுக்கு வந்தது அந்தநாள் நியாபகம் கடும் பஞ்சம் தலைவிரிச்சு ஆடியது அப்போது இவர் அப்பா அண்ணாதுரை மற்றும் பலரும் சொன்னாங்க ரூபாய்க்கு முணுப்படி அரிசி என்று பொய்களே பேசியே பெரியவர் காமராசரை தோற்கடிச்சாங்களே ஞாபகம் இருக்க தமிழா???????இதுபோல எவ்ளோபொய்களே தான் வாக்குறுதியே தான் ஏட்டுச்சுரைக்காய் எம்ஜி ஆர் ஜெயிச்சுட்டும்கூட அவா இருக்கும்வரை மதுவை கொண்டாந்து மக்கள் வயத்துல அடிக்கவே இல்லீங்க முக சி எம் ஆநாங்க உடனே வந்தது மதுக்கடை ஜெயா வந்தாக ஆஹா அழகா டாஸ்மாக் என்று நாமகரணம் செய்தாக கண்றாவி இதன் பலன் சசி அண்ட் அவ குடும்பங்களுக்கு அடிச்சது சுக்கிரதசை இந்த 50+ வருஷங்களிலே திமுக அண்ட் அதிமுக அநேகமா எல்லோருமே கொடியே பறக்கும் கோடீஸ்வரங்களுக்கு பஞ்சம் இல்லீங்க ஆனால் ரெண்டுகாச்சிலேயும் தொண்டர்கள் நிலைமை அம்மா தாயே பிச்சைபோட்டு என்றுதான் இருக்கானுக கிடைக்கு பிரியாணி சாராயம் காய் என்திண்டு இதுலே கொள்ளையர்திலகம் சசிகலா என்ற தியாகி சி எம் ஆவோணுமுன்னு பல பயித்தியங்க கூவுதே ஆபாசம்
Rate this:
Cancel
SIVAKUMAR V - Bangalore Urban,இந்தியா
20-அக்-202014:37:53 IST Report Abuse
SIVAKUMAR V ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது டெல்லியில் கேஜரிவால் அமுல் படித்தியபோது எல்லோரும் வரவேற்று வாழ்த்தினார்கள். அது பரவா இல்லையா / ஸ்டாலின் என்றால் தக்காளி சட்னியா
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
18-அக்-202011:24:32 IST Report Abuse
g.kumaresan இவர்கள் சொல்லுவது போல வீட்டிற்கு ஒருவர் வேலை என்றால் , டீ,காபீ கடை திறக்க முடியாது. பிரியாணி கடை கோவிந்தா .அழகு நிலையம் போட்டுத்தான். கடப்பாக்கள் பிரமாதம். யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் இன்னொரு கொரோனதான். தமிழ்நாடு சவக்குளி தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X