சென்னை: தமிழகத்தில் தற்போது நடக்கும் இருண்ட ஆட்சி நீடிக்கவே மத்திய பா.ஜ., அரசு விரும்புவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் தி.மு.க., நிர்வாகியின் இல்ல திருமண விழாவை வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இந்த இருண்ட ஆட்சி நீடிக்கவே மத்திய பா.ஜ., அரசு விரும்புகிறது. இந்த நிலை இன்னும் 6 மாதங்கள் தான். அதன் பின் காட்சி மாறும். ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை தி.மு.க.,விற்கு தர தயாராக உள்ளனர். தி.மு.க.,வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, தொட்டு பார்க்கவோ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE