கண்டமங்கலம் : சிறுவந்தாடு அடுத்த மோட்சக்குளத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் காலனியில் கடந்த 11ம் தேதி மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கூலித்தொழிலாளி பாலாஜி-நாகஜோதி தம்பதியரின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இதையொட்டி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தனத சொந்த செலவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி, வேஷ்டி, சேலை மற்றும் ரொக்கப் பணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் கவுசல்யா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் தண்டபாணி, அரிசிவக்குமார், ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேதுபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், கிளை செயலாளர்கள் கலிவரதன், ராஜேந்திரன், கஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE