புதுடில்லி: பிரதமர் இன்றைய தனது உரையில், இந்திய நிலப்பகுதியில் இருந்து சீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றப்போவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே,
இன்று மாலை 6 மணிக்கு உங்களின் உரையில், இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து சீன ராணுவம் விரட்டியடிக்கப்படும் தேதியை தயவு செய்து கூறுங்கள். நன்றி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Dear PM,
In your 6pm address, please tell the nation the date by which you will throw the Chinese out of Indian territory.
Thank you.
— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE