சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, 10 கோடி ரூபாய் வழங்கிய, தமிழக முதல்வருக்கு, தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் முதல்வர் நன்றி தெரிவித்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனடி உதவியாக, 10 கோடி ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதற்காக, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

அதேபோல, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும், முதல்வரை தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அறிவிப்புக்கு, நன்றி தெரிவித்தார். அத்துடன், முதல்வரின் தாயார் மறைவுக்கும் ஆறுதல் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE