சென்னை:'மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் விபரம்:
மருத்துவக் கல்விக்கான, 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, தங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.ஒப்புதல் அளித்தால் தான், இந்தக் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும்.உடனே, தாங்கள் ஒப்புதல் அளித்து, அரசுப் பள்ளி மாணவர்களின், மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கை:
இட ஒதுக்கீடு விவகாரத்தில், மாநில உரிமைகளுக்காக, அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட, தி.மு.க., தயாராக இருக்கிறது.எனவே, முதல்வர் இ.பி.எஸ்., உடனே அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்ன வகை போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து, அறிவிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE