லண்டன்: பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து, விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடைக்கு எதிராக தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சிறப்பு ஆணையம் வழங்கியது.

அதில் விடுதலை புலிகள் இயக்கம் தற்போது பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்ட சிறப்பு ஆணையம், புலிகள் மீதான தடை தவறானது என தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து விடுதலை புலிகளுக்கு எதிரான தடை, பிரிட்டனில் விரைவில் நீங்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE