வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாத அதிபர் டிரம்ப், எப்படி மக்களை காப்பார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்குவதையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிலடெல்பியாவில் நடந்த பிரசாரத்தில் ஒபாமா பேசியதாவது:

டிரம்ப், பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர். கொரோனா வைரசிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ள டிரம்பால் முடியவில்லை. இதில் அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்? இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை வெளியேற்றுவதற்கான ஜோபிடனின் திறமையையும் கமலாவின் திறமையையும் நம்புங்கள். நாட்டை மீண்டும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். 8 மாதங்களாக நம் நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE