சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,23) 4,262 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6.59 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 197 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-131) மூலமாக, இன்று மட்டும் 81,472 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 93 லட்சத்து 56 ஆயிரத்து 580 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,818 பேர் ஆண்கள், 1,239 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,24,529 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,78,689 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,262 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 33 பேர் உயிரிழந்தனர். அதில், 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,858 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 32,960 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE