புதுடில்லி: சோமாலியாவில் சிக்கி தவிக்கும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள நிறுவனத்தில் 10 மாதங்களுக்கு முன் உ.பி.,யைச் சேர்ந்த 25 பேர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 33 தொழிலாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்காமல் அந்நிறுவனம் தொழிலாளர்களை பிணைக் கைதிகளை போல நடத்தி வருகிறது.

இந்நிலையில் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நைரோபியில் உள்ள இந்திய உயர் ஆணையம் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய தொழிலாளர்களை மீட்க முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE