திண்டுக்கல் : 'வி.சி.க.,தலைவர் திருமாவளவனைக் கண்டித்து', திண்டுக்கல்லில் பா.ஜ., மகளிர் அணியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் அனிதா, பட்டியல் அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி, பட்டியல் அணி மாவட்ட துணைத்தலைவர் இளையராஜா, பொதுச்செயலாளர் மோனிகா, கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் பங்கேற்றனர்.'பெண்களை இழிவாக பேசிய, வி.சி.க., தலைவர் திருமாவளவனை கண்டித்து', ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.பழநியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி மாவட்ட தலைவர் ரேகா, பொதுச்செயலாளர் புனிதா, மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் செந்தில்குமார், நகர தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE