மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
'மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், அடுத்த மாத இறுதிக்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, போலீசாருக்கு, உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, மும்பையில் ஆளில்லா விமானங்கள், இலகு ரக விமானங்கள் மற்றும் 'பாரா கிளைடர்'கள் போன்றவை, நாளை மறுநாள் முதல், நவ., 30 வரை பறக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE