புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 58 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும் ஒரே நாளில் 43,893 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79.9 லட்சத்தை கடந்தது. 6.10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,20,010 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோதனைகள்
இந்தியாவில் நேற்று (அக்.,27) ஒரே நாளில் 10,66,786 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 680 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE