ஸ்ரீநகர்: காஷ்மீரில் மற்ற பகுதி மக்களும் நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டால் பலாத்காரம் போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் என மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க வழி செய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு அங்குள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரான சுரீந்தர் சவுதாரி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஜம்மு, அமைதியான பிரதேசமாகும். உயர்ந்த கலாச்சார பெருமை கொண்டது. கிராமங்களில் இருந்து இங்கு நிறைய மாணவிகள் படிக்க வருகிறார்கள். இந்தியாவின் மற்ற பகுதி ஆட்களும் இங்கு நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜம்மு-காஷ்மீர் வந்து நிலம் வாங்கி நிரந்தரமாக தங்கினால் என்ன ஆகும் தெரியுமா? இங்கு பாலியல் பலாத்கார போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE