காந்திநகர்: குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். . நாளை (சனிக்கிழமை) கேவாடியா - அகமதாபாத் இடையே கடல் விமான சேவை யை துவக்கி வைக்கிறார்.

முன்னதாக இன்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பா.ஜ., முன்னாள் எம்.பி.,, மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE