மதுரை: மதுரையில் நேற்று(30 ம் தேி) இரவு 11 மணியளவில் பலத்த மழை பெய்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கடந்தசில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதனையடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மதுரை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் நேற்று (30 ம் தேதி) இரவு 11 மணியளவில் இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. கனமழையால் நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிக காற்று மற்றும் கனமழையால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE