புதுடில்லி:''பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
'பீஹார் சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையில், சில தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளது' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளது என, கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிக்க தேவைஇல்லை. மக்களின் முடிவு தான் இறுதியானது. ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விபரங்களையும், பீஹார் தலைமை தேர்தல் அதிகாரி, தெளிவாக தெரிவித்து விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE