தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி தொடர்ந்து விலை சரிந்து வருவதால், விவசாயிகள் ஏரியில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பல பகுதிகளில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் போதிய அளவில் தென்மேற்கு பருவமழை பெய்ததால், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. இதனால், தக்காளி, நெல் உள்ளிட்டைவைகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்தனர்.தக்காளி விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதனால், இதன் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.
கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று முன் தினம், 6 ரூபாய்க்கும், நேற்று 4 ரூபாய்க்கும் உழவர் சந்தையில் விற்பனையானது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, 1 ரூபாய்க்கு கொள்முதல் நடந்ததால், விவசாயிகள் தக்காளியை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தக்காளி விலை சரிவில் உள்ளதால், வயலில் இருந்து பறித்த விவசாயிகள் சிலர், விரக்தியில் சாலை ஓரம், ஏரிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE