சிவகங்கை : 50 ஆண்டு காலமாக பட்டா கேட்டு போரா டிய 237 குடும்பங்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் இலவசமாக பட்டா வழங்கினார்.
சிவகங்கை அருகேயுள்ள இடையமேலுார், காந்திநகர் பகுதியில் 1972 ல் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அரசு நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். ஆட்சேபகரமற்ற நத்தம் நிலங்களை ஒப்படைப்பு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 50 ஆண்டுகளாக பட்டாகேட்டு போராடி வந்த காந்திநகரை சேர்ந்த 237 குடும்பங்களுக்கு 2.20 கோடி மதிப்புள்ள நிலங்களுக்கு பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், டி.ஆர்.ஓ., லதா,சிவகங்கை ஆர்.டி.ஓ., முத்துக்கழுவன், நேர்முக உதவியாளர் ராஜா, தாசில்தார் மைலாவதி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE