கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் - தொப்பம்பட்டி ரோட்டில், பொருளூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக பறக்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.குழந்தைகள், முதியோர்கள் ஒருவித அச்சத்துடன் ரோட்டை கடக்கின்றனர். பொருளூர் பஸ் நிறுத்தப்பகுதி, தனியார் வங்கி முன்பும் விரையும் வாகனங்களால் விபத்துகள் நடந்துள்ளது.
ஆதிதிராவிடர் காலனி முருகாத்தாள் கூறுகையில், ''கடைகளுக்கு செல்வதற்கு ரோட்டை கடந்து செல்வோர் விரைவாக செல்லும் வாகனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு வேகத்தடை அவசியம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE